ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
“ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்;
திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கணேசமூர்த்தி , ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர்;
பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடன் இணைந்து பயணப்பட்டார்;
ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட கணேசமூர்த்தியின் இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது;
கணேசமூர்த்தியின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”
தமிழக முதலமைச்சர்
- முக ஸ்டாலின்
சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.
Comments
Post a Comment