Posts

புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...

Image
          பவி கிரியேஷன்ஸ் மற்றும் வேல் இன்போடைன்மென் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு பனிவிழும் இரவு என்று பெயரிடப்பட்டுள்ளது.           தனிமையில் சோஷியல் மீடியா தவறுதலான வழிகாட்டுதலால் ஏர்ப்படும் பிரச்சினை சொல்லும் திர்லர் கதையாக உருவாகிறது,  S R ராஜேஷ் இயக்கத்தில் சதா முருகன், ஜெயக்குமார் மற்றும் செல்வகுமார் தயாரிக்கின்றனர்.                   Arun Karthi              ஒருநொடி, ஜென்ம நட்சத்திரம் போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நன்கு அறியப்பட்ட அருண் கார்த்தி இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கிறார்,  இன்விசுபள் உமன் என்ற ஹிந்தி தொடரின் மூலம் பிரபலமான இனாக்ஷி கங்குலி கதையின் நாயகியாகவும் இவர்களுடன் சேரன் ராஜ், சரவண சக்தி, உறியடி சுருளி, நந்தா, வினோத் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.   Enakshi Ganguly           ஒளிப்பதிவு ஜெயக்குமார்தங்கவேல், இசை சதா முருகன், படத்தொகுப்பு MS செல்வா...

*மதுரை மக்களே* சித்திரை திருவிழா நமக்கு கிடைத்த விபரமும் அதன் உள்ளே திருவிழாவை நமக்கு விட்டு கொடுத்த ஒரு கிராமத்தின் பெருமைமிக்க வரலாறு தெரியுமா*...!

*கிபி* 1650க்கு முன்பு வரை கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை. *மதுரை* சோழவந்தான் அருகிலுள்ள *தேனூர்* வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளழகர் எழுந்தருளி வந்தார். *கிபி* 1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ,வைணவ சமயத்தை ஒன்றினைக்கும் விதமாகவும்,நிர்வாக காரணங்களுக்காகவும் மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை சித்திரையில் தேனூர் வைகை ஆற்றில் இறங்கிய அழகர் விழாவுடன் இணைத்து சித்திரையில் மதுரைக்கு மாற்றினார். *அதற்கு* முன்பு வரை கள்ளழகர் அழகர்மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர்,கோட்டைமேடு வழியாக சித்திர பௌர்ணமி அன்று தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார்.        *அப்படி* தேனூர் வரும் அழகரை இப்போது மதுரை வைகை ஆற்றில் இறங்கும் அழகரை கூடலழகபெருமாள் எதிர்கொண்டு வரவேற்பதுபோல அப்போது குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் மன்னாடிமங்கலம்,சோழவந்தான்,திருவேடகம் வழியாக வந்து  அழகரை தேனூரில் எதிர்கொண்டு அழைப்பார்.             *மேலும்* அப்போது அழகர் ஆற்றில் குதிரை வ...

வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

Image
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்...  கோவை வெள்ளலூர்- செட்டிபாளையம் செல்லும் வழியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படும். இன்று மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வண்டிகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.

‘டி3’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட பட இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

Image
சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட பட இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பட இயக்குநர் பாலாஜிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தார். நடிகர் பிரஜன் நடிப்பில் ‘டி3’ என்ற பெயரில் படம் தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் தயாரிப்பாளர் மனோஜ் ரூ.4 கோடி பெற்றார். படத்தின் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு தருவதாக தயாரிப்பாளர் மனோஜ் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட்டதாக சாமுவேல் தொடர்ந்த வழக்கில் ‘டி3’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதாக, இயக்குநர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதை அடுத்து பாலாஜிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சினிமா, அரசியல், பொருளாதாரம் மற...

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை....

Image
*திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.      மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.     சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரண...

திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!..

Image
திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு கோபிசெட்டிப்பாளையம் அருகே, தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வாக்குவாதம் செய்ததாக புகார் கண்காணிப்பு நிலைக்குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் நடவடிக்கை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியதாக வழக்குப்பதிவு

மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது

Image
1.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1லட்சம் வழங்கும்-மகாலட்சுமி திட்டம். 2.மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.  3.புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.   4.விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. 5.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 6.நீட், க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம். 7.மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். 8.பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும் புதிய ஜிஎஸ்டி 2.0 ஏற்றப்படும். 9.மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். 10.மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுக்கபடும். 11.அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொள்வதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும். 12.100 நாள் வேலை வாய்ப்பு திட்டக் கூலி 400 ஆக உயர்த்தப்படும். 13.மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு பொதுப் பட்டியில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு  மாற்றப்படும். 14.முப்படைகளுக்கு ஆள் சேர்க...